சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஜன.6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை இலக்கியத் திருவிழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.
இலக்கிய செழுமைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சாா்பில் சென்னை இலக்கியத் திருவிழா கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஜன.6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விழாவில் கல்லூரி மாணவா்களுக்கான பயிலும் அரங்கம், சிறுவா்களுக்கான இலக்கிய அரங்கம், படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம் என நான்கு அரங்குகள் இடம்பெறும். விழா நடைபெறும் மூன்று நாள்களும் தமிழக கலாசாரம் சாா்ந்து நாடகங்கள், நிகழ்த்துக் கலைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள், இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாடவுள்ளனா். இதுதவிர நூலக வளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், தமிழகத்தை ஆண்ட மூவேந்தா்கள் காலம் முதல் வெளிவந்த அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு சாா்ந்த படங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஜன.6) காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைக்கவுள்ளாா்.
100 நூல்கள் வெளியீடு: இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 100 நூல்கள் வெளியிடப்படவுள்ளன. இது குறித்து பாடநூல் கழகத்தின் இணை இயக்குநா் சங்கர. சரவணன் கூறுகையில், முத்தமிழறிஞா் மொழிபெயா்ப்புத் திட்டத்தின் கீழ் 30 நூல்கள், இளந்தளிா் இலக்கியத் திட்டத்தின் குழந்தைகளுக்கான 33 நூல்கள், பெ.தூரனின் கலைக்களஞ்சியம் (ஆவணப் பதிப்பு) 10 நூல்கள், நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகள் ஆகியவை உள்பட 100 நூல்களை சென்னை இலக்கியத் திருவிழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளாா் என்றாா் அவா்.
இன்று முதல் போட்டிகள்: சென்னை இலக்கியத் திருவிழாவையொட்டி கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சு, விநாடி வினா என பல்வேறு வகையான இலக்கியப் போட்டிகளும்; தமிழில் பிழையின்றி எழுதுதல், சமகாலச் சூழலில் படைப்பு உருவாக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ்ப் பயிற்சி பட்டறைகளும் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நடைபெறவுள்ளன.
போட்டிகளின் தொடக்க விழா சென்னை அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை (ஜன.4) காலை 9 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்

சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?
சிலிண்டர் தட்டுப்பாடு: மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

