இதுதொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு மடவூரைச் சேர்ந்த எச்.முகமது அஸ்கர்(24), கொடுவாளியைச் சேர்ந்த எம்.முகமது ஷபி(36), மலப்புரம் கோட்டக்கலைச் சேர்ந்த எஸ்.முகமது சலீம்(37), மலப்புரம் வைக்கத்துரைச் சேர்ந்த எம்.அனீஷ்மோனா(33), மானூரைச் சேர்ந்த எஸ்.அஸ்ரப்(46) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கைதான 5 பேரும் துபையில் வேலை செய்துள்ளதும், முகமது சலீம் மீது கொரட்டி காவல் நிலையத்திலும், அனீஷ்மோன மீது கானாதூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் 5 பேரூம் கடன் செயலி மூலமாக எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்த சைபர் கிரைம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சஷாங்க் சாய் வெகுவாகப் பாராட்டினார்.