காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி உருவாக்க உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2023, 3:08 pm

DIN

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன. அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,600 பள்ளிகளில் பயிலும் 8.80 லட்சம் மாணவர்கள், 3,169 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.