சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

7 நாள்களுக்கு பின் லோயர் கேம்ப்பில் முழு கொள்ளளவு மின் உற்பத்தி!

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 7 நாள்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சனிக்கிழமை முதல் தொடங்கியது.

News image
Updated On :7 ஜனவரி 2023, 5:46 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 7 நாள்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சனிக்கிழமை முதல் தொடங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி, 140 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 7,126 மில்லியன் கன அடியாக இருந்து. நீர் வரத்து வினாடிக்கு 116.53 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,867 கன அடியாக இருந்தது. 

168 மெகாவாட் உற்பத்தி
கடந்த டிச.30 வரை தமிழக பகுதிக்கு அணையிலிருந்து வினாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் அதன் முழு உற்பத்தியான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பிறகு டிச.31 இல் தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாக  குறைக்கப்பட்டதால்,  மின் உற்பத்தி 45 மெகாவாட்டாக இருந்தது. 

இந்நிலைநிலையில், சனிக்கிழமையில் இருந்து அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்து, வினாடிக்கு 1,867 கன அடியாக திறந்து விடப்பட்டது. அதனால் மின் உற்பத்தி மீண்டும் அதிகரித்து 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டதால் கடைமடை பகுதியில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தொய்வில்லாமல் தொடங்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.