
சுயமாக தொழில் தொடங்க சிறந்த இடமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள் கிழமை இன்று (ஜன.9) தெரிவித்துள்ளார்.
சென்னை எம்ஆர்சி நகரில் உலக தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், சென்னையில் முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடம் என்ற இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் தொழில் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.