ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கையடக்கக் கருவிகள் மூலம் கோயில் கட்டணச் சீட்டுகள்!

கையடக்கக் கருவிகள் மூலம் கோயில்களில் கட்டணச் சீட்டை வழங்கும் முறையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இன்று தொடக்கி வைத்தார். 

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜனவரி 2023, 3:15 pm

DIN

கையடக்கக் கருவிகள் மூலம் கோயில்களில் கட்டணச் சீட்டை வழங்கும் முறையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இன்று தொடக்கி வைத்தார். 

இதன் மூலம் கட்டணச் சீட்டை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அதிலுள்ள கியூஆர் குறியீட்டினை (QR) முன் ஆய்வு கருவி மூலம் ஒளி நகல் (Scan) ஏற்படுத்தும் வசதியை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

பக்தர்களுக்கான கட்டண சேவை வசதியினை எளிமைப்படுத்தவும் மற்றும் கட்டண சீட்டு மையங்களில் கூட்டத்தினை கட்டுப்படுத்தவும் பக்தர்களிடமிருந்து சேவைக்கான கட்டணத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்டு கையடக்க கருவிகள் (PoS) மூலம் கட்டண சீட்டுகள் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முத்லே கோயில்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், பக்தர்களுக்கான சேவையை மேலும் விரைவுபடுத்தும் வகையிலும், மின்னணு பணப் பரிமாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையிலும், கடன் அட்டை, பற்று அட்டை, யூபிஐ பரிவத்தனைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 530 திருக்கோயில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.