கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாரிசு - துணிவு: கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளை வழங்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News image
Updated On :11 ஜனவரி 2023, 4:45 pm

DIN

துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளை வழங்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு, அஜித்குமார் நடிப்பில் தயாரான துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (ஜன.11) வெளியாகியுள்ளன.

டிக்கெட் விற்பனையை அதிகரிக்கவும், வசூல் வேகத்தைக் கூட்டவும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த காட்சிகள் அதிகாலை 4 மணி முதலே தொடங்கும்.

இந்த நிலையில் அதிகாலை 4, 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டது.

துணிவு திரைப்படத்துக்கு நள்ளிரவில் சிறப்பு காட்சி அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு காட்சிகளுக்காக ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன.

பொங்கலையொட்டி 16ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பு காட்சிகளை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், 13 முதல் 16ஆம் தேதி வரையான நாட்களில் சிறப்பு காட்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்களுக்கான பணம் திரும்ப வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தநிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கை ஏற்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.