கொளத்தூர் சமத்துவப் பொங்கல் விழாவில் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின்!
தனது தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டனர்.


தனது தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வருகிற ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சட்டப்பேரவை தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் கலந்துகொண்டார்.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்தினார். மேலும் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...