திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பழனி கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)
Updated On :12 ஜனவரி 2023, 7:59 am

DIN

பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, திருவிடைமருதூர் தொகுதி திமுக எம்எல்ஏ கோவிசெழியன், ராமநாதசாமி கோயில்('நாச்சியார் கோயில்) குடமுழுக்கு குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ரூ. 12 லட்சம் செலவில் 8 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 3 மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

இதன்பின்னர் பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, 'பழனி கோயிலில் வருகிற 27 ஆம் தேதி குடமுழுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பழனி கோயில் குடமுழுக்கிற்கு முழுக்க முழுக்க பத்திரிகை, தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.  

தமிழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்களை வைத்து தமிழிசை வேத மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக அரசு பதவியேற்ற பிறகு தமிழை வளர்த்து வருகிறது. 

திமுக ஆட்சியில் தேவாரமும் திருவாசகமும் அனைத்து கோயில்களிலும் ஒலிக்கின்றன. 100க்கும் மேற்பட்ட ஓதுவார்களை நியமித்து திருமூலத்திற்கு நிகரான வேத மந்திரங்கள் கோயில்களில் ஒலிக்கின்றன. 

பழனி கோயில் குடமுழுக்கிலும் ஆகம விதிப்படி தமிழில் மூல மந்திரங்கள் ஓதப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.