நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி புதிய விமான நிலையம் ஜூன் மாதத்தில் தயாராகும்

திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டப் பணியாக, புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :12 ஜனவரி 2023, 12:41 pm

DIN

திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டப் பணியாக, புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.951 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய முனையம் ஜூன் 23ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஒரே நேரத்தில் சுமார் 2,900 பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த முனையமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

48 பயணிகள் வருகை மையங்கள், 10 போர்டிங் பாலங்கள் என பல நவீன வசதிகளுடன், பயணிகளின் வருகையை விரைவாக்கவும், எளிமையாக்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

சுமார் 75 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டடமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்துக்கு புதிய முனையம் கட்டும் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் பிப்ரவரிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து ஒத்திகை நடைபெறும். ஜூன் மாதம் புதிய முனையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.