வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

'தமிழ்நாடு' எனக் குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து!!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :14 ஜனவரி 2023, 6:45 am

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை  எழுந்தது. அதேபோன்று பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டிருந்தது. இதனால் ஆளுநரின் பொங்கல் விழாவில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ஆளுநர் இன்று விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், தமிழக ஆளுநர் என்பதற்கு பதிலாக, தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் எனக் குறிப்பிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.