டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உறுதிமொழியுடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

DIN


மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தொடங்கியது. 

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஜன.15) காலை 8 மணியளவில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் மூர்த்தி, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் கலோன் ஆகியோர் வருகை தந்தனர். 

மாடுபிடி வீரர்கள் மஞ்சள் ஊதா, ஆரஞ்சு, பச்சை, பிஸ்கட், ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது. 

பின்னர், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் உறுதிமொழியேற்பு நடைபெற்று முதல் சுற்று மாடுபிடி வீரர்கள் களத்திற்கு வந்துள்ளனர். 

முதல் சுற்றில் 25 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் பங்கேற்கும் வீர்ரகள் மஞ்சள் டி-சர்ட் அணிந்து களம் இறங்கியுள்ளனர். 

300 மாடு பிடி வீரர்கள், 800 காளைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 

முதல் காளையாக வெளிவந்த விக்ரம் பிடிப்பட்டது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரருக்ககு கார் மற்றும் பசு மாடும், இரண்டாவது வீரர் மற்றும் காளைக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படுகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்ககாசு வழங்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.