ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அனுமதியின்றி ஆத்தூரில் ரேக்ளா போட்டி!

ஆத்தூர் உடையார்பாளையத்தில் பொங்கல் விழா கழகத்தின் சார்பில் வருடந்தோறும் ரேக்ளா குதிரைப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

News image
Updated On :17 ஜனவரி 2023, 2:05 pm IST


ஆத்தூர்: ஆத்தூர் உடையார்பாளையத்தில் பொங்கல் விழா கழகத்தின் சார்பில் வருடந்தோறும் ரேக்ளா குதிரைப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இதனையடுத்து இன்று ரேக்ளா போட்டி நடத்துவதற்காக உடையார்பாளையம் பொங்கல் விழா கழகத்தின் சார்பாக அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதனால் இன்று சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.

இந்த ரேக்ளா போட்டியில் 17 சிறிய குதிரைகள் கலந்து கொண்டன. மேலும் ஆத்தூர் உடையார்பாளையத்திலிருந்து கொத்தம்பாடி வரை 17 குதிரைகள் சென்றன.

Story image

ஆனால், இந்த 17 குதிரைகள் அருகே 500 பைக்கில் மொத்தம் ஆயிரம் பேர் முந்திக்கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் பார்க்க முடியாமல் தவித்தனர். மேலும் குதிரையை முந்தி செல்லவிடாமல் பைக்கில் செல்லும் இளைஞர்கள் தடுத்ததால் குதிரை ஓட்டும் ரேக்ளா  வீரர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

ரேக்ளா ரேஸா இல்லை பைக் ரேஸா என்ற அளவுக்கு நிலைமை இருந்ததாக என்று  சமூக ஆர்வலர் மிகவும் கவலை தெரிவித்துள்ளனர். ரேக்ளா போட்டியில் குதிரைகள் ஓட்டுவதற்காக மட்டுமே அனுமதி தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இன்று நடைபெற்ற சிறிய குதிரைக்கான ரேக்ளா போட்டியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நவீன் பிரதாப் முதல் பரிசும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த குதிரை இரண்டாம் பரிசும், திருச்சியை சேர்ந்த சாந்தி கருப்பன் மூன்றாம் பரிசு, அம்மாபேட்டை ரத்தின வேல் நான்காம் பரிசும் பெற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.