பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

News image
Updated On :19 ஜனவரி 2023, 11:33 am

DIN


மதுரை: பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் தமிழ் கடவுளான பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்தது. 

அந்த உத்தரவின் அடிப்படையில் பல்வேறு கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பழனி முருகன் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி விஷ்ணுகுமார் மற்றும் நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

மேலும், அதற்கான அழைப்பிதழ்களை தமிழ்நாடு அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

இந்நிலையில், நீதிபதிகள் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும். மேலும், அதன் நிலை அறிக்கையை குடமுழுக்கு முடிந்த பிறகு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.