நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது: இறையன்பு

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 

News image

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு

Updated On :20 ஜனவரி 2023, 3:33 am

DIN

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 

வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 

♦ குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். 

♦ விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 

♦ குடியரசு தின விழாவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

♦ கிராம சபை கூட்டங்களில் எவ்வித சாதிய பாகுபாடும் இருக்கக் கூடாது உள்ளிட்ட  15 விதமான அறிவுறுத்தல்களை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.