புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஓராண்டில் 5வது முறையாக தனியார் பால்விலை உயர்வு.. லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் ஓராண்டில் ஐந்தாவது முறையாக ஐந்து தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன.

News image
Updated On :20 ஜனவரி 2023, 7:05 am

DIN

தமிழ்நாட்டில் ஓராண்டில் ஐந்தாவது முறையாக ஐந்து தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. சராசரியாக 70 நாள்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2 வரை விலையை உயர்த்தி உள்ளது.

விலையேற்றத்தை அடுத்து, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.48 இல் இருந்து ரூ.50 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 இல் இருந்து ரூ.52 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால்  லிட்டர் ஒன்றுக்கு ரூ.62 இல் இருந்து ரூ.64 ஆகவும், நிறைகொழுப்பு பால் லிட்டருக்கு ரூ.70 இல் இருந்து ரூ. 72 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோல் தயிர் ரூ.72 இல் இருந்து ரூ.74 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை (ஜன.20) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.