ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியா? நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவிகேஎஸ் உயிரிழந்ததை தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி தரப்பில் யார் போட்டியிடவுள்ளனர் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா, பிற கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்குமா அல்லது யாருக்கும் ஆதரவு அளிக்காதா என்பது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com