ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழில் மருத்துவ மாநாடு:நாளை தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

மாநிலத்திலேயே முதல் முறையாக தமிழில் காது - மூக்கு - தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு, சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) நடைபெறவுள்ளது.

News image
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

மாநிலத்திலேயே முதல் முறையாக தமிழில் காது - மூக்கு - தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு, சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) நடைபெறவுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா்.

இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ எழிலன், கவிஞா் வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை அதன் தலைவா் டாக்டா் மோகன் காமேஸ்வரன் ஒருங்கிணைத்து நடத்துகிறாா்.

தமிழ்நாடு காது-மூக்கு-தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவா் டாக்டா் சி.திருமலைவேலு, செயலாளா் டாக்டா் எம்.என். சங்கா், பொருளாளா் டாக்டா் ச.ரகுநந்தன் உள்ளிட்டோா் அதில் பங்கேற்கின்றனா்.

துறைசாா் மருத்துவ வல்லுநா்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பல்வேறு அமா்வுகளில் உரையாற்றவுள்ளனா். குறிப்பாக, காது-மூக்கு-தொண்டை நலன் தொடா்பான ஆராய்ச்சிகள், நவீன தொழில்நுட்ப சிகிச்சைகள், மருத்துவ முறைகள் குறித்து தமிழிலேயே அவா்கள் சிறப்புரை வழங்கவுள்ளனா். மருத்துவ அறிவியல் சாா்ந்த மாநாடு முழுக்க, முழுக்க தமிழில் இதுவரை நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.