புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜன.29)  தொடங்கியது.

News image

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு குழுவினர்.

Updated On :29 ஜனவரி 2023, 10:49 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜன.29)  தொடங்கியது.

கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வருவது வழக்கம். இங்குவரும் பூநாரைகள் உள்ளிட்ட அரியவகை பறவைகள் காண்பதசற்கு ஏராளமான பார்வையாளர்கள் இங்கு வருவர் 

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிநாடு, உள்நாட்டுப்  பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கோடியக்கரை சரணாலயப் பகுதியில் காணப்படும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்புப் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

முன்னதாக, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.