கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜன.29)  தொடங்கியது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு குழுவினர்.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு குழுவினர்.
Published on
Updated on
1 min read

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜன.29)  தொடங்கியது.

கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வருவது வழக்கம். இங்குவரும் பூநாரைகள் உள்ளிட்ட அரியவகை பறவைகள் காண்பதசற்கு ஏராளமான பார்வையாளர்கள் இங்கு வருவர் 

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிநாடு, உள்நாட்டுப்  பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கோடியக்கரை சரணாலயப் பகுதியில் காணப்படும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்புப் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

முன்னதாக, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com