ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா

சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.  சிவன், பார்வதி ஆட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2023, 8:18 am

DIN

சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.  சிவன், பார்வதி ஆட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைமாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்தாண்டு திருவிழாவானது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டாம் நாள் விழாவான தீமிதி உற்ச்சவம் கடந்த வெள்ளிகிழமை முடிவுற்ற நிலையில், பத்தாம் நாள் திருவிழாவான தேர் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக தொடங்கியது.

முன்னதாக தேரில் எழுந்தருளிய புற்றடி மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் நிலையிலிருந்து புறப்பட்டு  நான்கு வீதிகளையும் வலம் வந்தது. தேரினை  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

அப்பொழுது தேருக்கு முன்பு  சிவன், பார்வதி, காளி, அம்மன் உள்ளிட்ட வேடமணிந்த கலைஞர்கள் மேல தாளங்கள் முழங்க நடனம் ஆடினர். சிறுவர், சிறுமிகளின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.