மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காவிரியில் நீர் எடுக்கக்கூடாது: தமிழக அரசு மனுத்தாக்கல்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2023, 3:50 pm

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்துக்கு காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடக அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக தமிழக - கர்நாடக மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெங்களூரு மாநகராட்சிக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.