பேனா சின்னம் கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்!

சென்னை மெரினா கடற்கரையில் பேனா வடிவ சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பேனா சின்னம் கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்!
Published on
Updated on
1 min read

சென்னை மெரினா கடற்கரையில் பேனா வடிவ சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வரும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் காலை 10.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் 137 அடியில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியமா எனக் கேள்வி எழுப்பிய பாஜக நிர்வாகி முனுசாமியை தாக்க முயற்சி செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடலில், பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா வடிவ நினைவிடம் முழுவதும் கடல் பகுதியில் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித் துறை, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

அதைப் பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னா், தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com