தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

தம்மம்பட்டி பேரூராட்சி திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி!

பேரூராட்சி திமுக தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்களே கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:45 am IST

சேலம்: தம்மம்பட்டி பேரூராட்சி திமுக தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்களே கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த நகர கழக செயலாளர் வி.பி. ராஜா மற்றும் அவரது மனைவி கவிதா தலைவராக இருந்து வருகிறார்.  

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து தன்னிச்சையாக முடிவெடித்து மூன்று வார்டுகளை தவிர 15 கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாமலும்  சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, முறையாக உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவதில்லை. இதை கண்டித்து கேட்டால் அடாவடியாக பேசுவது, தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து பேருராட்சி அலுவலகம் முன்பு தர்னா போராட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வாக்களித்த மக்களுக்கு எந்த ஒரு பணிகளும் செய்ய முடியவில்லை. அதனால் அவரை கண்டித்து வருகிற 7 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தம்மம்பட்டி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு தம்மம்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் மனு அளித்தனர். 

இதில், திமுக, காங்கிரஸ், அதிமுக  உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். திமுக பேரூராட்சி மன்ற தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்களே கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.