தண்டவாளத்தில் தற்படம் எடுத்தபோது ரயிலில் அடிபட்டு 2  பேர் பலி 

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் தற்படம் எடுத்த இரு தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.
தண்டவாளத்தில் தற்படம் எடுத்தபோது ரயிலில் அடிபட்டு 2  பேர் பலி 
Published on
Updated on
1 min read


திருப்பூர்: திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் தற்படம் எடுத்த இரு தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பி.பாண்டின் (23), இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்தவர் எம்.விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். 

இந்தநிலையில், விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ரயில் தண்டவளாத்தில் நின்று கைபேசியில் தற்படம் எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரயில்வே காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com