ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

தண்டவாளத்தில் தற்படம் எடுத்தபோது ரயிலில் அடிபட்டு 2  பேர் பலி 

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் தற்படம் எடுத்த இரு தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:45 am IST


திருப்பூர்: திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் தற்படம் எடுத்த இரு தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பி.பாண்டின் (23), இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்தவர் எம்.விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். 

இந்தநிலையில், விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ரயில் தண்டவளாத்தில் நின்று கைபேசியில் தற்படம் எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரயில்வே காவல் துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.