சாதிய அடக்குமுறைகளும், ஏற்றத்தாழ்வும் எந்தக் கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்று பா. ரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாஸில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஜூன் 29-ம் தேதி வெளியான 'மாமன்னன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமூக நீதி குறித்துப் பேசும் இப்படத்தினை அரசியல் தலைவர்கள், பிற இயக்குநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... மாமன்னன் - திரைவிமர்சனம்
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
'மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!' என்று கூறியிருந்தார்.
இதையும் படிக்க | மாமன்னன் தனபால் என்றால்... ஃபஹத் ஃபாசில் யார்?
தொடர்ந்து இதற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின்,
`மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித்திற்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கருணாநிதி வழியில் எங்கள் கழகத் தலைவரும் இப்பணியைத் தொடர்கிறார்.
`பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.
ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
`மாமனà¯à®©à®©à¯' திரà¯à®ªà¯à®ªà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பாராà®à¯à®à®¿à®¯ à®à®¯à®à¯à®à¯à®¨à®°à¯ à®à®à¯à®¤à®°à®°à¯ பா.à®à®°à®à¯à®à®¿à®¤à¯ à®à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ நனà¯à®±à®¿. à®à®¾à®¤à®¿à®¯ à®à®à®à¯à®à¯à®®à¯à®±à¯à®à®³à¯à®®à¯ - à®à®±à¯à®±à®¤à¯à®¤à®¾à®´à¯à®µà¯à®®à¯ à®à®´à®à®®à¯ à®®à®à¯à®à¯à®®à®²à¯à®², à®à®¨à¯à®¤ à®à®à¯à®à®¿à®à¯à®à¯à®³à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯ à®à®¤à¯ à®à®±à®µà¯ à®à®´à®¿à®à¯à®à®ªà¯à®ªà® வà¯à®£à¯à®à¯à®®à¯.
à®à®©à¯à®µà®°à¯à®à¯à®à¯à®®à®¾à®© à®à¯à®¯à®®à®°à®¿à®¯à®¾à®¤à¯à®¯à¯ à®à®±à¯à®¤à®¿ à®à¯à®¯à¯à®¯, தà¯à®à®°à¯ பரபà¯à®ªà¯à®°à¯ à®à¯à®¯à¯à®¤à¯ à®®à®à¯à®à®³à®¿à®à¯à®¯à¯â¦ https://t.co/i3FAanRGcaâ Udhay (@Udhaystalin) July 3, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









