கோவை: கல்லூரி சுற்றுச்சுவர் விழுந்து 4 பேர் பலி!
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் இன்று (ஜூலை 4) திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த 2 பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையுடன் அப்பகுதி மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதிக அளவு இடிபாடுகள் உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கட்டடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வடமாநிலத் தொழிலாளர்களும், ஆந்திர மாநிலத் தொழிலாளர்களும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததால், உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் முழுமையாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...