கோவை தனியார் கல்லூரியின் பக்கவாட்டு சுவர் விழுந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் நேற்று (ஜூலை 4) திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அக்கல்லூரியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட பொறியாளார் என்ஜினி சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.