கோவையில் சுவர் இடிந்து விழுந்த விவகாரம்: 2 பேர் கைது!

கோவை தனியார் கல்லூரியின் பக்கவாட்டு சுவர் விழுந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,  பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கோவையில் சுவர் இடிந்து விழுந்த விவகாரம்: 2 பேர் கைது!
Updated on
1 min read

கோவை தனியார் கல்லூரியின் பக்கவாட்டு சுவர் விழுந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,  பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் நேற்று (ஜூலை 4) திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அக்கல்லூரியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட பொறியாளார் என்ஜினி சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com