சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் வியாழக்கிழமை தடை விதித்தனர்.
தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது பெய்து வருகிறது. இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு நீர் வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வியாழக்கிழமை காலையில் அருவியின் நீர்வரத்தைக் கண்காணித்த ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை விதித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து சுருளியாற்றில் குளித்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.