குற்றால அருவிகளில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தொடர்மழை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Published on
Updated on
1 min read


தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நீடிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com