மினி லாரி - லாரி மோதல்: ஓட்டுநர், கிளீனர் பலி

தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மினி லாரியும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மினி லாரி - லாரி மோதல்: ஓட்டுநர், கிளீனர் பலி


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மினி லாரியும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்தவர் பி. ஆறுமுகம் (45). மினி லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர். இவர் தஞ்சாவூரில் இருந்து மினி லாரியில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 

தஞ்சாவூர் அருகே கண்டியூர் பகுதியில் சென்ற இந்த மினி லாரியும், அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகமும், அவருடன் பயணித்த திருச்சோற்றுத்துறையைச் சேர்ந்த டி. தமிழ்ச்செல்வனும் (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com