டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பென்னாகரம்: வெள்ளை நிறத்தில் அரியவகை பாம்பு!

சாலைப் பணி மேற்கொள்ளும் போது  குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

News image
Updated On :10 ஜூலை 2023, 12:41 pm

DIN


பென்னாகரம்:  பென்னாகரம் அருகே சாலைப் பணி மேற்கொள்ளும் போது அருகில் இருந்த நீர் குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பென்னாகரம் அருகே கரியம்பட்டி - முதுகம்பட்டி பகுதிகளுக்குச் செல்லக்கூடிய தார் சாலை பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாய்க்கனேரி பகுதியில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சாலையின் அருகே இருந்த நீர் குட்டையில் மிதந்து கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு ஜேசிபி இயந்திரத்தின் அதிக இரைச்சல் மற்றும் மண் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வுகளால் வெளியேறி சாலை அமைக்கும் இடங்களில் ஊர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

சாலையில் ஊர்ந்து சென்ற அரிய நிறப் வெள்ளை நிறப் பாம்பை பணியாளர்கள் செல்லிடை பேசியில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.