தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தீபாவளி பண்டிகை: ரயில் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

News image

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

Updated On :12 ஜூலை 2023, 2:48 am

DIN

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ரயில் பயணிகள் வசதிக்காக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) வாயிலாக 120 நாள்களுக்கு முன்பாக, பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை நவ.12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நவ.9-ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதேபோல, நவ.10-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13-ஆம் தேதி(நாளை) முதலும், நவ.11-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 முதலும், நவ.12-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 முதலும் முன்பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.