ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம்

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :13 ஜூலை 2023, 9:47 am

DIN

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் கடந்த 2016ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை அவர்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் பாரதி, பாபு உள்ளிட்ட மூன்று ஊழியர்கள் அலுவலக நுழைவுவாயில் மேற்பகுதியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

பெரிய கடை போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்தனர். ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடர்வதாக அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.