விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக வி.ஏ.டி. கலிவரதன் இருந்து வருகிறார். இவர் கட்சியின் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிவருவதாகவும், தேவையற்ற காரணங்களை கூறி கட்சி, சார்பு அணிகளின் நிர்வாகிகளைப் பொறுப்புகளிலிருந்து நீக்கி வருவதாக கூறப்படுகின்றது.
இதையும் படிக்க | குடியிருப்புப் பகுதியில் காமராஜர் சிலை! சேலத்தில் பரபரப்பு!!
இந்த நிலையில், இதனைக் கண்டித்தும் வி.ஏ.டி. கலிவரதனைக் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தியும் பாஜகவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு சனிக்கிழமை காலை 11 மணி முதல் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.