பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கணவருடன் தகராறு: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!

கரப்பாளையம் அருகே உள்ள கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு மகன்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2023, 12:30 pm IST

பரமத்தி வேலூர்: கரப்பாளையம் அருகே உள்ள கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு மகன்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரப்பாளையம் அருகே உள்ள வெட்டுக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் தனசேகரன் (30). இவரது மனைவி சசிகலா (27). இவர்களுக்கு திவித்(6), தர்ஷன் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகரன் டெம்போ வேன் மற்றும் கார் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். 

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனசேகரனும் சசிகலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சனிக்கிழமை காலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா அருகில் உள்ள ஒரு கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், சசிகலாவுக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளே ஆனதால் திருச்செங்கோடு கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார். 

இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நல்லூர் போலீசார் மூவரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.