புவி வட்டப் பாதையில் பயணித்துவரும் சந்திராயன் - 3 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுப் பாதை தொலைவு வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது.
எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை தொலைவு வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission update:
â ISRO (@isro) July 15, 2023
The spacecraft's health is normal.
The first orbit-raising maneuver (Earthbound firing-1) is successfully performed at ISTRAC/ISRO, Bengaluru.
Spacecraft is now in 41762 km x 173 km orbit. pic.twitter.com/4gCcRfmYb4
இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதை தொலைவை அதிகரிக்கும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
தற்போது விண்கலம் குறைந்தபட்சம் 173 கிமீ. தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீ. (41,762 கி.மீ. X 173 கி.மீ) தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வருகிறது என பதிவிட்டுள்ளது.
எதிா் வரும் நாள்களில் திட்டமிட்டபடி அடுத்தடுத்து சுற்றுப் பாதைகளின் தொலைவை அதிகரித்து நிலவை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

60 வயதைக் கடந்த ஓட்டுநா்களுக்கு ரூ.3 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்







