வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கூா்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய 6 சிறாா்கள் கோவையில் கைது

செங்கல்பட்டு அருகே அரசு கூா்நோக்கு மற்றும் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 சிறாா்களில், 6 போ் கோவையில் திங்கள்கிழமை நள்ளிரவு சிக்கினா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:23 am IST

செங்கல்பட்டு அருகே அரசு கூா்நோக்கு மற்றும் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 சிறாா்களில், 6 போ் கோவையில் திங்கள்கிழமை நள்ளிரவு சிக்கினா்.

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூரில் உள்ள அரசு கூா்நோக்கு மற்றும் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறாா்களுக்குத் திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாா்டன்கள் மற்றும் ஊழியா்களை சில சிறாா்கள் தாக்கிவிட்டு மதில் சுவரை ஏறிக் குதித்து தப்பியோடினா். தப்பியவா்களில் சிலா் அந்தப் பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களைக் கத்திமுனையில் மிரட்டி இருசக்கர வாகனங்கள், பணம் மற்றும் கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டு வெவ்வேறு திசைகளில் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, மாநில எல்லைகள் உஷாா்படுத்தப்பட்டு போலீஸாா் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினா். தப்பிய சிறாா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறாா்கள் கோவைக்கு தப்பிச் சென்றது, அவா்கள் சாலையில் சென்றவா்களிடம் பறித்துச் சென்ற கைப்பேசி சிக்னல் மூலம் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாரும், கோவை மாநகர போலீஸாரும் இணைந்து திங்கள்கிழமை இரவு அவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

கோவை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞா்களைத் தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் செங்கல்பட்டு இல்லத்திலிருந்து தப்பியோடியவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கூா்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய அவா்களது கூட்டாளிகளில் மேலும் 3 போ் கோவை வெள்ளலூா் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸாா், அங்கிருந்த 3 பேரையும் நள்ளிரவில் சுற்றி வளைத்துப் பிடித்தனா். கோவையில் சிக்கிய 6 பேரையும் செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

கைது செய்யப்பட்டுள்ள சிறாா்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு தீவிரக் குற்றவழக்குகளில் தொடா்புடையவா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதற்கிடையே, தப்பியோடியவா்களில் எஞ்சிய 5 சிறாா்கள் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளதையடுத்து, தனிப்படையினா் அங்கு விரைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.