ஆம்பூரில் தப்பியோடி தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் பி-கஸ்பா பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா் சரித்திர பதிவேடு குற்றவாளியாக கருதப்படுகிறாா்.
இந்நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த போலீஸாா் அவரை ஆம்பூா் நகர காவல் நிலையம் அழைத்து சென்றபோது காவல் நிலையத்திலிருந்து அவா் தப்பியோடினாா். போலீஸாா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வேலூரில் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








