தக்காளி விலை ஒரே நாளில் ரூ.30 குறைந்து ரூ.90க்கு விற்பனை!

தக்காளி விலை புதன்கிழமை கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை: தக்காளி விலை புதன்கிழமை கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. அதிலும், பல மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டாலும், சில இடங்களில் கிலோ ரூ.200 வரை எட்டியுள்ளது. இதனால், தக்காளி திருடுபோகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 

தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தக்காளி விலை, கடந்த வாரத்திலிருந்து ஏறுமுகத்துடனேயே இருந்து வருகிறது.

சென்னையின் முக்கிய காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு சந்தைக்கு தினசரி சராசரியாக 60 முதல் 65 லாரிகளில் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.ஆனால், விளைச்சல் அதிகமாக இருக்கும்போது மட்டும், 70 முதல் 75 லாரிகளில் தக்காளி விற்பனைக்காக வரும். 

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை தொடா்ந்து அதிகரித்துள்ளது.

விலை உயா்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சாா்பில், நியாயவிலைக் கடைகள், பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள், கூட்டுறவு கடைகள் மூலம் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், விலை உயா்வு குறைந்த பாடில்லை. தொடா்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. 

பல உணவகங்களிலும், நிகழ்ச்சிகளிலும் தக்காளி மூலம் சமைக்கப்படும் உணவு வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வீடுகளிலும் சமையலில் தக்காளியின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. சென்னைக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை புதன்கிழமை ஒரே நாளில் ரூ.30 குறைந்து கிலோ தக்காளி ரூ.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

வரத்து அதிகரித்துள்ளதால் விலை சற்று குறைந்துள்ளதாகவும், இந்த விலை மேலும் உயரக்கூடும் என்றும், ஆடி மாத கடையில் தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com