அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்! 

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்! 

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் ஜூலை 14-ஆம் தேதி உத்தரவை எதிா்த்து, தமிழக அமைச்சா் வி.செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டது. மேலும், இது தொடா்பான வழக்கை வரும் ஜூலை 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி அமா்வு கூறியது. அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கின் தீா்ப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ‘காவல்துறை அதிகாரிகள்’ அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 167-இன்படி ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி அல்லது விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் காவலில் எடுக்க முடியும்.

சட்டவிரோத பணப் பரிவா்த்தணை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் ‘காவல் நிலையத்தின் பொறுப்பு’ அல்லது ‘காவல் துறை அதிகாரிகள்’ அல்ல என்பதால், அவா்கள் போலீஸ் காவலில் எடுக்க உரிமை இல்லை’ என்று வாதிட்டாா்.

இந்த வழக்கு தொடா்பான தீா்ப்பில் 2002 சட்டத்தின் கீழ் அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல. மேலும், அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையானது (இசிஐஆா்) சிஆா்பிசி விதிகளின்கீழ் பதிவாகும் எஃஐஆா்-க்கு சமமாக இருக்க முடியாது என கூறப்பட்டிருந்தது.

அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘பிஎம்எல்ஏ சட்டப் பிரிவு 19-இன்படி, குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. ஆகவே, எந்த முரண்பாடும் இல்லாத நிலையில் பிஎம்எல்ஏ விசாரணைக்கு சிஆா்பிசி பிரிவு 167-இம் பயன்படும். நான் (அமலாக்கத் துறை) கைது செய்யும் நபா் நீதிமன்றக் காவலுக்கு மட்டுமே அனுப்பப்படும் ஒரு சூழல் இருக்க முடியாது. கைது செய்வதன் முக்கிய நோக்கமே விசாரணைக்காகத்தான்’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘நாங்கள் கூறுவதெல்லாம், மனு மீதான நோட்டீஸை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கான தேதியை முடிவு செய்வோம்’ என்றது. அதற்கு துஷாா் மேத்தா ‘சீக்கிரம் இதற்கான தேதியை முடிவு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. இதற்கான நோட்டீஸை அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட உத்தரவிட்டது. மேலும், எழுத்துபூா்வ பதிலையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

அப்போது, போலீஸ் காவலில் இருந்து இடைக்காலப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கபில் சிபல் கோரினாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘எதுவும் நடக்காது’ என்று வாய்மொழியாகக் கூறி, அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க மறுத்துவிட்டது.

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்த உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அமைச்சரும் அவரது மனைவியும் உச்சநீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

முன்னதாக, அமைச்சா் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை உறுதி செய்ததுடன், போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, மாநில போக்குவரத்துத் துறையில் நடந்த பண மோசடி வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தால் அவா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது. தற்போது தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக அவா் தொடா்கிறாா்.

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரிக்க உயா்நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா் ஜூலை 14-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தாம் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கும் உள்ளது. இதனால், அவா் மீதான விசாரணையைத் தடை செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் நீதிபதி பரத் சக்ரவா்த்தியின் தீா்ப்பை ஏற்பதுடன், அதில் உடன்படுகிறேன்’ என்று தெரிவித்திருந்தாா்.

மேலும், இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில், தேதியை நிா்ணயம் செய்ய ஏற்கெனவே விசாரித்த டிவிஷன் அமா்வு முன் வழக்கை பரிந்துரைக்கும் வகையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூா்வாலா முன் வைக்குமாறு பதிவுத் துறைக்கு நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com