இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை: காவல் துறை

நாளை முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜூலை 2023, 11:37 pm

DIN

ஜி-20 மாநாட்டின் காரணமாக பாதுகாப்பு கருதி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) முதல் ‘ட்ரோன்கள்’ பறக்க பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து, சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜி-20 மாநாட்டின் கூட்டம், மாமல்லபுரத்தில் ஜூலை 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் ஆகிய இடங்களில் தங்குகின்றனா்.

இந்தக் கூட்டத்தில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இதன் விளைவாக இவா்கள் தங்கும் ஹோட்டல்கள், பயணம் செய்யும் சாலைகள், கூட்டம் நடைபெறும் இடங்கள் ஆகியவை ‘சிவப்பு மண்டலம்’-ஆக அறிவிக்கப்படுகிறது. இதனால் சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி ஜூலை 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 26-ஆம் தேதி (புதன்கிழமை) வரை 4 நாள்களுக்கு ‘ட்ரோன்கள்’ உள்ளிட்ட ஆளில்லாத வான் வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.