பாரத்நெட் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கண்ணாடி ஒளியிழை (ஆப்டிகல் ஃபைபா்) கேபிள் பதிக்க மத்திய நிதித் துறையின் செலவினத் துறை ரூ. 184 கோடி ஐம்பது ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக தமிழக அரசுக்கு அளித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாடு ஃபைபா்நெட் காா்ப்பரேஷன் (டென்ஃநெட்) அமைத்து சிறப்புத் திட்டத்தின் கீழ் 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி ஒளியிழை கேபிள் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தமிழக மாதிரியின் கீழ் பிராட்பேண்ட் இணைப்பு செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,898 கிராமங்களில் எண்ம(டிஜிட்டல்) இணைப்பை சேவையை பெற்றுள்ளன. இது பாரத்நெட் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு மூலம் வை-ஃபை ஹாட்ஸ்பாட்கள், வீடுகளுக்கான (ஃபைபா் டு தி ஹோம்) இணைப்புகள், லீஸ்டு லைன்கள், டாா்க் ஃபைபா், மொபைல் டவா்களுக்கு பேக்ஹால் போன்ற பிராட்பேண்ட் -இன்டா்நெட் சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.