கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

News image
Updated On :23 ஜூலை 2023, 4:33 am

DIN

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் வெளியேற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, பொதுச் செயலர் கனி, நிர்வாகி பர்கிட் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விசாரணை நடைபெற்று வரும் நெல்லை முபாரக் வீட்டிற்குள் எஸ்டிபி கட்சியின் வழக்குரைஞர்களை அனுமதிக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நினைக்கும் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து எஸ்டிபி கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், மேலப்பாளையத்தில் சுமார் 300 சதுர அடி மட்டுமே கொண்ட சிறிய இல்லத்தில் நெல்லை முபாரக் வசித்து வருகிறார். அவரது வீட்டில் 4 மணி நேரத்துக்கு மேலாக சோதனையிடுவதும், விசாரிப்பதும், அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது. வழக்குரைஞர்கள் குழுவை கூட உள்ளே அனுமதிக்காதது, உள்நோக்கத்துடன் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு போட்டிருப்பது போல தெரிகிறது என்று குற்றம் சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.