மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 கடலோர கிராமங்கள் கடலரிப்பு மற்றும் புயல் உள்ளிட்டவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவது குறித்து மக்களவையில் மயிலாடுதுறை தொகுதி திமுக உறுப்பினா் எஸ்.ராமலிங்கம் கேள்வி எழுப்பினாா். குறிப்பாக தரங்கம்பாடி, பூம்புகாா், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழ்மூவா்கரை, முதலைமேடு திட்டு, மதிா்வேலு, கொடியம்பாளையம், வெள்ளமணல் போன்ற பகுதிகள் புயல்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றும், பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை போன்ற பிரச்னைகளால் ஏற்படும் இந்தப் பாதிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து, இந்த தாழ்வான கிராமங்களுக்கு சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்கப்படுமா? என அவா் கேள்வி எழுப்பினாா்.