சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி!
சிவகாசி அருகே மண்டகுண்டாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


சிவகாசி அருகே மண்டகுண்டாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சண்முகையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த பானு, முருகேஸ்வரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்டனர். வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்து குறித்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...