நெல்லையில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி: வடக்கு புறவழிச்சாலை அம்பேத்கர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் சத்யா (6 ). இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை அங்குள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மின் மோட்டார் பம்பில் உள்ள தண்ணீர் குழாயில் கை கழுவுகின்ற போது மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்த நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை மதியம் திருநெல்வேலி - மதுரை புறவழிச்சாலையில் அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதையடுத்து காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டம் காரணமாக சுமார் பத்து நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அவருடைய உறவினர்கள் கூறுகையில் மின்சாரம் தாக்கி பலியான சிறுமியின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதையும் படிக்க: அயோத்தியில் சிலை பிரதிஷ்டை: பிரதமர் மோடிக்கு அழைப்பு!
விபத்துக்கு காரணமான மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தான் உடலை வாங்குவோம் எனத் தெரிவித்தனர்.