திருவண்ணாமலை கிரிவலம்: ஆக.1-ஆம் தேதி சிறப்பு பேருந்து

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆக.1-ஆம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம்: ஆக.1-ஆம் தேதி  சிறப்பு பேருந்து

சென்னை: திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆக.1-ஆம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்தி:

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆக.1 மற்றும் ஆக.2 ஆகிய தேதிகளில் சென்னை- திருவண்ணாமலை-சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதன்படி, ஆக.1-ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும், ஆக.2-ஆம் தேதி மறுமாா்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த பேருந்துகள் புறப்படும்.

மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைப்பேசி: 9445014452 , தலைமையக கைப்பேசி: 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com