கிருஷ்ணகிரியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 4 பேர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதையும் படிக்க | மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது
பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.