
திருப்பூர்: திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது.
செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை பெரம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த லாரியானது சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலையில் வந்து கொண்டிருந்தது.
இந்த லாரியானது பல்லக்கவுண்டனம்பாளையம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் கவிழந்தது. இதில், லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் சாலையில் உடைந்து சிதறியது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினர் காயமடைந்த லாரி ஓட்டுநர் செல்வகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.