உதகைக்கு வாகனங்கள் செல்வதில் இருந்த கட்டுப்பாட்டிற்கு இன்றுமுதல்(ஜூந்1) தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கோடை விழா முடிந்ததால் உதகைக்கு மேட்டுப்பாளையம், கோத்தகிரி உள்ளிட்ட 2 வழித்தடங்களில் வாகனங்களை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் 2 வழித்தடங்களில் வாகனங்களை இயக்கலாம் என மாவட்ட எஸ்.பி. அறிவிப்பு விடுத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாகவும், மறுவழித்தடத்தில் கோத்தகிரி வழியாகவும் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் கோடை சீசனை கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலை ஏப்ரல் 26 ஆம் தேதி ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், கோடை சீசன் நிறைவடைந்துள்ளதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் இருவழித் தடங்களிலும் வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜேகே பேப்பர் முதல் காலாண்டு நிகர லாபம் 63% உயர்வு!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படத்தின் டிரைலர்!

சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு!

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |



